500 பெண்களிடம் பாலியல் சீண்டல்.! சிக்குவோர்களை சீரழித்த பைக் காமுகன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

500 பெண்களிடம் பாலியல் சீண்டல்.! சிக்குவோர்களை சீரழித்த பைக் காமுகன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!


young man arrested for harassment

சென்னை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணி முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த அப்பெண் அலறல் சத்தம் போட்டுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞன் தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து சிடிவி காட்சியில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவுஎண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சென்னை பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த 21 வயதான சரண் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 21 வயதான சரண் பூந்தமல்லியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். பணம் வசூலிப்பதற்காக சரண் சென்னையில் பல இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்.

harassment

அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் தனிமையில் செல்லும் பெண்களை வழிமறித்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்படும் பெண்கள் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவும் ,புகார் அளிக்கவும் தயங்குவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சரண், பெண்களிடம் அத்துமீறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சரண் இதுவரை 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், நாளொன்றுக்கு 2 இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து சரண் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.