4 மாதங்களுக்கு முன்பு மாயமான மகன்... விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!!



young-lady-murder-her-second-husband-in-trichy

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அதே செங்கல்சூளையில் கணவரை இழந்த ரேகா என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். ரேகாவின் முதல் கணவர் மூலம் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபு மற்றும் ரேகாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் 4 மாதங்களுக்கு முன்பு தனது மகன் பிரபுவை காணவில்லை என்று கூறி அவரது தந்தை ஆறுமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் போலீசிடம் ரேகாவின் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது இரண்டாவது கணவர் பிரபு ரேகாவின் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

trichy

இதனை ரேகா கண்டித்த போதிலும் கேட்காததால் ஆத்திரமடைந்த ரேகா பிரபுவின் தலையில் அரிவாளால் வெட்டியும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டின் பின்னால் இருந்த காவிரி ஆற்றில் தூக்கி வீசியதாக கூறியுள்ளார். இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட நிலையில்,  அந்த சடலம் அடையாளம் தெரியாததால் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அது பிரபு என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.