10-ம் வகுப்பு படிக்கும் மகள் தூக்குப்போட்டு தற்கொலை.! தாயின் 2-வது கணவர் தான் காரணம்.! அதிர்ச்சி பின்னணி.!
10-ம் வகுப்பு படிக்கும் மகள் தூக்குப்போட்டு தற்கொலை.! தாயின் 2-வது கணவர் தான் காரணம்.! அதிர்ச்சி பின்னணி.!
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 36 வயது நிரம்பிய சரஸ்வதி என்ற பெண் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் இவர் பிரபாகரன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அரும்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.
சரஸ்வதிக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த மகள் தீபிகா 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது தனது மகள் தீபிகா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய தீபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தீபிகா வீட்டில் இருப்பதால் தனது மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று கருதிய பிரபாகரன், அடிக்கடி தீபிகாவை அடித்து துன்புறுத்தியதுடன், மோசமான வார்த்தைகளால் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே விரக்தி அடைந்த தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.