பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லீக் நரம்பியல் நோயால் காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
திருமணம் முடிந்த 7 நாட்களில் கணவனுடன் சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்! கதறி அழும் பெற்றோர்.
திருமணம் முடிந்த 7 நாட்களில் கணவனுடன் சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்! கதறி அழும் பெற்றோர்.
விழுப்புறம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்து உள்ள மாதவச்சேரி என்னும் பகுதியை சேர்ந்தவர் இன்ஜினியரான பாலமுருகன். இவருக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 7 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் கள்ளக்குறிச்சியை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். வாகனம் அம்மன் நகர் என்னும் பகுதியை நெருங்கியபோது இவர்கள் மூவரும் சென்ற வாகனம் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பலமாக மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி பிரியதர்ஷினி சாலை நடுவே விழுந்ததில் பின்னே வந்த லாரி அவர் மீது எறியுள்ளது. இதில் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சாலை ஓரமாக விழுந்ததில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்னனர்.
திருமணம் முடிந்து 7 நாட்களில் புது பெண் விபத்தில் இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.