கடவுளே!! அதிவேகம்.. கட்டுப்பாட்டை இழந்த பைக்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..
கடவுளே!! அதிவேகம்.. கட்டுப்பாட்டை இழந்த பைக்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..
இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த அபினேஷ்ராஜ் (22) என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி என்ற பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட அபினேஷ்ராஜ், சாலையில் சில அடிதூரம் இழுத்துச்செல்லப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு வந்து அபினேஷ்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில், தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
Video Credits: https://www.polimernews.com/