திருமணம் ஆகி மறுதினமே மணப்பெண்ணை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிய கணவன்.! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!

திருமணம் ஆகி மறுதினமே மணப்பெண்ணை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிய கணவன்.! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!



yong-girl-suicide-attempt-in-police-station

விருதுநகர் மாவட்டத்தில் ராணி என்ற பெண் அவரது உறவினரான வீரசீமான் என்பவரை காதலித்துள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்திற்கு மணமகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் திருமணம் முடிந்த மறுதினம் ராணியை அவரது பெற்றோரின் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்து அழைத்து செல்வதாக கூறிவிட்டு கணவர் சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ராணியின் கணவர் வந்து அழைத்துச் செல்லவில்லை. இதனால் ராணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராணி விஷம் அருந்திவிட்டு நேற்று இரவு விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்துள்ளார். 

young girl

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் தடுக்கும் கணவரின் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.