நடைபாதையில் படுத்து தூங்கிய தம்பதி.! தாறுமாறாக வந்து மோதிய கார்.! துயரச் சம்பவம்.!
நடைபாதையில் படுத்து தூங்கிய தம்பதி.! தாறுமாறாக வந்து மோதிய கார்.! துயரச் சம்பவம்.!
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் சாலையோரம் நடைபாதையில் வசித்து வருபவர் பரமசிவம். இவரும், இவருடைய மனைவி தேவியும் தினந்தோறும் சாலையோரம் உள்ள நடைபாதையில் தங்களது வாழ்க்கையை பயணித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வழக்கம்போல் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் படுத்து தூங்கினர்.
அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து இருந்த தேவி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தேவியை அதே காரில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி உயிரிழந்த சோகத்தில் பரமசிவம் கதறி அழுதுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விபத்து ஏற்படுத்திய அந்த காரை ஓட்டி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய அசமது என்பது தெரியவந்தது. திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தேவி மீது மோதியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.