காதலனை கத்திமுனையில் மிரட்டி, காதலன் முன்பே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்!

காதலனை கத்திமுனையில் மிரட்டி, காதலன் முன்பே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்!


woman harassed by 3 youngster front of lover

வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். அதேக் கடையில் காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் வேலைப் பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்றிரவு 9.30 மணிக்கு வேலை முடிந்ததும், வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றனர். பூங்காவின் ஒரு ஓரத்தில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல், திடீரென்று அவர்கள் அருகில் வந்து, திடீரென்று அந்த பெண்ணை தனியாக இழுந்து செல்ல முயற்சித்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் காதலன் அவர்களை தடுக்க முயற்சித்தபோது பெண்ணின் காதலனை அடித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உட்கார வைத்துளனர்.

harasment

இதனையடுத்து அந்த பெண்ணிடம் இருந்த நகை, செல்போன்களை பிடுங்கி காதலன் கண்முன்னே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் அந்த மர்ம கும்பல். இதனையடுத்து அந்த பெண் அலறல் சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால், அந்தக் கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலில் ஒருவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.