காதலனுடன் உல்லாசம்.! மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி.! அதிர்ச்சி பின்னணி.!

காதலனுடன் உல்லாசம்.! மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி.! அதிர்ச்சி பின்னணி.!


wife killed her husband for illegal affair

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது மீனாட்சிபேட்டை ஜே.ஜே.நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(38). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா(30), இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில், வனஜாவுக்கு அப்பகுதியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவி நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இது நீடித்து வந்த நிலையில், கணவன் முருகன் இதை கண்டுபிடித்து இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி முருகன் மர்மமான முறையில் அவரது வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளார். தனது கணவர் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வனஜா கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அவரது உறவினர்கள் முருகனின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

illegal affairஆனால் முருகன் உடம்பில் காயம் இருந்ததால் அப்பகுதி மக்கள் முருகன் சாவில் சந்தேகம் உள்ளது என்று போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து வனஜாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, நானும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமார் கடந்த ஐந்து வருடமாக நெருக்கமாக இருந்து வந்தோம். இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதை கணவர் கையும், களவுமாக பிடித்ததால், அவரை கழுத்தை நெரித்து காதலன் உதவியுடன் கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் கிருஷ்ணகுமார் மற்றும் வனஜா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.