டே ஷிஃப்ட் அங்க நைட் ஷிஃப்ட் இங்க.. கணவனின் செயலால் குழந்தைகளுடன் மனைவி விபரீதம்..!

டே ஷிஃப்ட் அங்க நைட் ஷிஃப்ட் இங்க.. கணவனின் செயலால் குழந்தைகளுடன் மனைவி விபரீதம்..!


wife-commited-suicide-for-family-problem

குடும்ப பிரச்சினையின் காரணமாக சூடக்கட்டிகளை தண்ணீரில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கு கொடுத்ததுடன், தானும் குடித்து தாய் தற்கொலைக்கு முயன்ற பயங்கரம் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அடுத்த மேலவாசல் ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (வயது 35). இவர் ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக இருக்கிறார். இவரது மனைவி சத்யா. தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரமாக விவேக் இரவு பணிக்கு மேல் தாமதமாக வருவதால், அவருக்கும் சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றிரவு விவேக் வழக்கம் போல இரவு பணிக்கு சென்ற நிலையில், அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தனது 3 குழந்தைகளுக்கும் சூடக்கட்டிகளை தண்ணீரில் கலந்து கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

thiruvarur

மேலும் தனது குழந்தைகளுடன் தான் தற்கொலைக்கு முயன்றதை கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த விவேக், மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். 

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடும்பப் பிரச்சினையின் காரணமாக தாய் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலையானது தீர்வாகாது. தான் கஷ்டப்படுவதுடன், தனது குழந்தைகளையும் சேர்த்து கஷ்டப்படுத்துவது மிகவும் கொடுமையான ஒன்றாகும். பேசி தீர்ப்பதே பிரச்சனைக்கு நல்வழி வகுக்கும்.