கட்டிய மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

கட்டிய மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!


wife-beat-his-husban-for-harassment

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சுந்தர் என்ற சுதீருக்கும் அருள்செல்வி என்ற பெண்ணிற்கும் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு மகள் ஒருவர் இருந்துள்ளார். சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிவந்துள்ளார்.

சுந்தரின் மனைவி அருள்செல்வி திருமங்கலம் அருகேயுள்ள கீழ்செம்பட்டி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கட்டிலில் இருந்து கீழே மயங்கி விழுந்ததாக கூறி சுந்தரை குடும்பத்தினர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

husband and wife

மருத்துவமனையில் சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரது உயிர் தளத்தில் ரத்தம் இருப்பதாகக் கூறி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சுந்தரின் மனைவி அருள் செல்வியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவர் அடிக்கடி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால், அவரே அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் பிரேதபரிசோதனை முடிவின் படி விசாரணையை துவங்கவுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.