நண்பரின் இளம் மனைவியை ஏமாற்றி உல்லாசம்: பணம் நகைகளுடன் எஸ்கேப் ஆன தொழிலதிபர்..!

நண்பரின் இளம் மனைவியை ஏமாற்றி உல்லாசம்: பணம் நகைகளுடன் எஸ்கேப் ஆன தொழிலதிபர்..!



who-cheated-her-and-raped-her-and-got-money-and-jewels

கோயமுத்தூர், சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் (25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளம்பென்ணின் கணவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இளம்பெண்ணும் தந்து கணவருடன் சேர்ந்து தொழிலை நடத்தி வந்துள்ளார்.

இவர்களது கடைக்கு போத்தனூரை சேர்ந்த அவரது கணவரின் நண்பரான சங்கர் (35) என்பவர் அடிக்கடி கடைக்கு வந்து சென்றுள்ளார். இவர் சென்னை மற்றும் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறார். அப்போது இளம்பெண்ணுக்கு, சங்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒருநாள் சங்கர் இளம்பெண்ணை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். அதன் பின்னர் அந்த செல்ஃபியை கணவரிடம் காண்பித்து விடுவேன் என இளம்பெண்ணை சங்கர் மிரட்டியுள்ளார். மேலும் மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதன் காரணமாக பயந்து போன இளம்பெண்  ஓட்டலுக்கு என்றுள்ளார்.

அங்கு இளம்பெண்ணை மிரட்டிய சங்கர், வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். பின்னர் உனது கணவரை விவாகரத்து செய்து விடு, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் இளம்பென்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய இளம்பெண் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சங்கர் தொடர்ந்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அவர் அழைக்கும் போது வர மறுத்தால் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், அவரை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் நகை மற்றும் பணத்தை பெற்றுள்ளார். தற்போது அவர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதற்கிடையே, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த இளம்பெண், தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றிய சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.