நேற்றைய போட்டியின் மூலம் விராட் படைத்த இரண்டு அதிரடி சாதனை! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியின் மூலம் விராட் படைத்த இரண்டு அதிரடி சாதனை! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!


virat new record

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் ரத்தானதை அடுத்து, இரண்டாவது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 142 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.3 ஓவர்களில் எளிதாக வென்றது. 

virat

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் நன்காவதாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இந்த ரன்களின் மூலம் இரண்டு சாதனைகள் கோலி படைத்துள்ளார்.

நேற்றைய போட்டிக்கு முன்பு வரை விராட் கோலியும், இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மாவும் தலா 2633 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தனர். இந்நிலையில், 30 ரன்கள் எடுத்ததால் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2663 ரன்கள் குவித்துள்ளார். இதுதவிர டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 1000 ரன்களை கோலி கடந்துள்ளார்