80 வயது மூதாட்டி 21 வயது இளைஞனால் பாலியல் பலாத்காரம்; நலம் விசாரிப்பதுபோல வீடுபுகுந்து பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!
80 வயது மூதாட்டி 21 வயது இளைஞனால் பாலியல் பலாத்காரம்; நலம் விசாரிப்பதுபோல வீடுபுகுந்து பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் குகன் (வயது 21). இதே கிராமத்தில் 80 வயதுடைய மூதாட்டி தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டியின் இல்லத்திற்கு சென்ற குகன், அவரிடம் நலம் விசாரிப்பதைப்போல நடித்து பாலியல் பலாத்காரம் செய்து தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் மூதாட்டி தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூதாட்டியின் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்து குகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.