27 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி பலாத்காரம்; தெருவில் நடந்துவரும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

27 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி பலாத்காரம்; தெருவில் நடந்துவரும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்.!



Viluppuram Tindivanam Young Girl Raped 

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை அடுத்துள்ள வசித்து வரும் 27 வயதுடைய பட்டதாரி பெண்மணி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. 

இவரின் தாய் விபத்தில் இறந்துவிட்ட நிலையில், தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

கடந்த அக்.12ம் தேதி இரவு 7 மணிக்கு கோவிலுக்கு சென்ற நிலையில், 9 மணிக்கு வீட்டிற்கு வந்த பென்ன்னின் முகத்தில் வீக்கம் இருந்துள்ளது. 

இதனைக்கண்ட அக்கா தங்கையிடம் விசாரித்தபோது, ரைஸ்மில் வழியாக வந்தசமயத்தில், தன்னை அடியலாம் தெரியாத நபர்கள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதனால் பதறிப்போன அக்கா செய்வதறியாது தவித்த நிலையில், நேற்று திண்டிவனம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.