காதலை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்; விஷம்‌குடித்த காதலன்.. தெரிந்தவுடன் தூக்குபோட்டு கொண்ட காதலி..!

காதலை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்; விஷம்‌குடித்த காதலன்.. தெரிந்தவுடன் தூக்குபோட்டு கொண்ட காதலி..!


unloving-parents-the-poisoned-lover-the-girl-friend-han

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன்  விஷம் குடித்து இறந்ததை கேள்விப்பட்ட காதலி,  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அண்ணா சாலை பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (50). இவரது மனைவி சரஸ்வதி(47). இவர்களது மகன் மகள் சுதா (22) மகன் உதயசங்கர் (20). மகள் சுதா நெல்லை பேட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்த அவரது தாய் மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையாவும்(24), சுதாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சுப்பையாவின் அண்ணன்கள் இருவர் திருமணமாகாமல் இருந்ததாலும் சுதா படிப்பை முடிக்கவில்லை என்பதாலும் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதனால் மனமுடைந்த  சுப்பையா நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தைக் எடுத்து குடித்துள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுப்பையா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து சுப்பையாவின் உடல் நேற்று பிற்பகல் நாங்குநேரிக்குக் கொண்டு வரப்பட்டது . இதனால் சுதாவின் பெற்றோர் அங்கு  சென்றுள்ளனர்.

இந்நிலையில் தான் காதலித்த மாமன் மகன் சுப்பையா விஷம் குடித்து உயிரிழந்ததால் வாழ்க்கையை வெறுத்த சுதா வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை சுமார் மூன்று மணி அளவில் சுப்பையாவின் இறுதி சடங்கு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டின் கதவு உட்பக்கமாக பூட்டியிருப்பது பார்த்து சந்தேகம் அடைந்தார். பின்னர், ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் உடலை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதலித்த இருவரும் உறவினர்களாக இருந்தாலும் பெற்றோர்கள் எதிர்ப்பால் இருவரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.