டிக்-டாக் மூலம் நட்பு! விலைமாதுகளாக சித்தரிக்கப்பட்ட இளம்பெண்கள் அதிர்ச்சி சம்பவம்!
டிக்-டாக் மூலம் நட்பு! விலைமாதுகளாக சித்தரிக்கப்பட்ட இளம்பெண்கள் அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்போன் டிக்-டாக் செயலி மூலம் நண்பர்கள் ஆகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து டிக்-டாக்கில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். டிக்-டாக் செயலிக்கு அடிமையானதால் அவர்களின் கணவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது அவரவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் இவருக்கும், தேனியை சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் நட்பு ஏற்பட்டது. சுகந்தியும் தனது நண்பரான செல்வம் என்பவருடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் சுகந்திக்கும், மேற்கண்ட 2 இளம்பெண்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்-டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது நண்பர் செல்வத்துடன் சேர்ந்து அந்த 2 இளம்பெண்களின் டிக்-டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலைமாதுகளாக சித்தரித்து டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் சுகந்தி மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.