மத்திய அரசிற்கு அதிரடி கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்! ஆதரவு தரும் கிராம மக்கள்!

மத்திய அரசிற்கு அதிரடி கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்! ஆதரவு தரும் கிராம மக்கள்!


TTV Dinakaran talk about hydro carbon

ஹைட்ரோகார்பன் திட்டத்தை
செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ,  மக்களின் கருத்தோ தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ மக்களின் கருத்தோ கேட்க தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதற்கு மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என தெரிவித்துள்ளது மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளை இத்திட்டம் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்திருக்கிறது. இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.