சசிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.!

சசிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.!



ttv dhinakaran talk about sasikala health

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.

sasikala

இந்தநிலையில் சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு மருத்துவமனைக்கு டிடிவி தினகரன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.