இளம்வயது திருநங்கை கல்லால் அடித்து கொலை! அதிர்ச்சி சம்பவம்!

இளம்வயது திருநங்கை கல்லால் அடித்து கொலை! அதிர்ச்சி சம்பவம்!


transgender murder


விழுப்புரம் அயினம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நேற்று காலை திருநங்கை ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருநங்கையின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரை யாரோ மர்மநபர்கள் கல்லால் அடித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த திருநங்கை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரமங்கலத்தை சேர்ந்த அன்பு என்கிற அபிராமி என்பதும், இவர் விழுப்புரம் அய்யங்கோவில் திட்டு பகுதியில்  திருநங்கைகளுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.

                   Transgender

நேற்று முன்தினம் சக திருநங்கைகளுடன் பொதுமக்களிடம் பணம் வசூலிக்க வெளியே சென்ற அபிராமி நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அவருடன் சென்ற மற்ற 3 திருநங்கைகளை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அபிராமி உடல் கிடந்த இடத்தின் அருகே உள்ள புறவழிச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் திருநங்கையை கொலை செய்தவர்களின் பதிவுகள் இருக்கின்றதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.