பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய இளைஞருக்கு ஏற்பட்ட காதல்! இறுதியில் என்ன நடந்துள்ளது பார்த்தீர்களா!

பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய இளைஞருக்கு ஏற்பட்ட காதல்! இறுதியில் என்ன நடந்துள்ளது பார்த்தீர்களா!


Transgender men love and marry young girl

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் . 26 வயது நிறைந்த அவர் பிஏ பிஎல் முடித்துவிட்டு வக்கீலாக பயிற்சி பெற்று வருகிறார். ராம் பெண்ணாக பிறந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாறியவர். இந்நிலையில் ராமுவுக்கு அவரது வீட்டின் அருகே வசித்துவந்த சரஸ்வதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அதுவே காதலாக மாறியது. 

மேலும் இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் சரஸ்வதியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. மேலும் அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Transgenderஇதனால் ராம் மற்றும் சரஸ்வதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவையை அடுத்த சூலூர் பகுதிக்கு வந்து, அங்கு சில திருநம்பிகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து இருவரும் சூலூர் காவல்நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் சரஸ்வதியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சூலூர்  போலீசார்கள் காதல் ஜோடிகளை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளனர்.