மனைவி திருநங்கை.! திருமணம் முடிந்த 2 ஆண்டுகளுக்கு பின் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
மனைவி திருநங்கை.! திருமணம் முடிந்த 2 ஆண்டுகளுக்கு பின் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்த, வழக்கில், பெற்றோர் உட்பட மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வி என்ற பெண்ணிற்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
அன்பு செல்வி, நான் எப்படியாவது அரசு வேலையில் சேர வேண்டும். எனவே இருவருக்குள்ளும் இப்போதைக்கு தாம்பத்யம் வேண்டாம் என்று அன்பு செல்வி செல்வத்திடம் கூறியுள்ளார். செல்வமும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பை அன்பு செல்வி முடித்துள்ளார்.
திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆனதால், செல்வம் அன்புசெல்வியிடம் தம்பத்யம் வைத்துக் கொள்ள முயன்ற போது, அவர் திருநங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வம் அன்புசெல்வியின் பெற்றோரிடத்தில் இது குறித்து கேட்ட போது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், வேதனையடைந்த செல்வம் காவல்நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது. மருத்துவ பரிசோதனையில் அன்பு செல்வி திருநங்கை என்பது தெரிய வந்தது. வழக்கில் செல்வம் தரப்பில் நியாயம் இருந்ததால், அவரை ஏமாற்றி திருமணம் செய்த அன்பு செல்வி, தந்தை அசோகன், தாய் செல்லம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.