இளம்பெண்ணுடன் திருமணம் ஆனவர் கள்ளக்காதல்.. பர்வதமலையில் தற்கொலை செய்து மேலாக பயணம்..!
இளம்பெண்ணுடன் திருமணம் ஆனவர் கள்ளக்காதல்.. பர்வதமலையில் தற்கொலை செய்து மேலாக பயணம்..!
பர்வதமலையில் காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வதமலை, கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி மேலே உள்ளது. இந்த மலை மலையேற்ற சுற்றுலா தளத்திற்கும், மூலிகை செடிகளுக்கும் பெயர்வாய்ந்தது ஆகும்.
இந்நிலையில், சம்பவத்தன்று மலையின் உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சென்ற காதல் ஜோடி, சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கும் சமயத்தில் மலையில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.
இருவரும் தற்கொலை செய்து 1 வாரம் ஆகிய நிலையில், துர்நாற்றம் வீசுவதை கண்டு அப்பகுதி மக்கள் கடலாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நீண்ட சிரமத்திற்கு பின்னர் இருவரின் உடலையும் மீட்டனர்.
காதல் ஜோடியின் அடையாள அட்டையை சேகரித்த காவல் துறையினர், உயிரிழந்தவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜசேகர், பிரின்டிங் பிரஷ்ஷில் பணியாற்றி வந்த தேவி என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் ராஜசேகருக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், தேவியுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேவிக்கு திருமணம் ஆகவில்லை.
கடந்த 2 மாதத்திற்கு முன்னதாகவே வீட்டை விட்டு வெளியேறி இருந்த கள்ளக்காதல் ஜோடி, தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் பர்வத மலையில் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளது.