மதுபோதையில் சம்பவம்.. சித்தப்பாவை சரமாரியாக குத்தி கொலை செய்த மகன்..!

மதுபோதையில் சம்பவம்.. சித்தப்பாவை சரமாரியாக குத்தி கொலை செய்த மகன்..!



Tiruvannamalai Man Killed Liquor Drinking

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மண்டகொளத்தூர், வடக்குத்தெருவில் வசித்து வருபவர் முனியப்பா. இவரின் மகன் குமார். குமாரின் அண்ணன் மகன் ராமதாஸ். 

இவர்கள் இருவரும் அங்குள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தங்கியிருந்து மேஸ்திரியாக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்ததால், அவ்வப்போது சேர்ந்தே குடிப்பது உண்டு. 

Tiruvannamalai

இந்நிலையில், நேற்று வேலையை முடித்துவிட்டு இருவரும் மதுபானம் அருந்திய நிலையில், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த ராமதாஸ், தனது சித்தப்பாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதனால் குமாரின் வயிறு, கை பகுதிகளில் சரமாரி வெட்டுக்காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ராமதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.