அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
கள்ளகாதலனுக்கு ஆசைப்பட்டு கணவனை வெட்டிக்கொலை செய்த மனைவி.. சொத்துக்காக முன்னாள் இராணுவ வீரரை கொன்ற பயங்கரம்.!
கள்ளகாதலனுக்கு ஆசைப்பட்டு கணவனை வெட்டிக்கொலை செய்த மனைவி.. சொத்துக்காக முன்னாள் இராணுவ வீரரை கொன்ற பயங்கரம்.!
கணவரை விடுத்து கள்ளக்காதலில் குடிகொண்ட மனைவி கணவனை கூலிப்படை ஏவி போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம், ஆண்டிபாளையம் அருந்ததிபாளையத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 46). இவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். மாரிமுத்துவின் மனைவி கவிதா (வயது 29). தம்பதிகளுக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காட்பாடியில் இருக்கும் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதியன்று இரவு 08.30 மணியளவில் வீட்டில் குளித்துக்கொண்டு இருந்த மாரிமுத்துவை 3 பேர் கும்பல் வெட்டிவிட்டு செய்து தப்பி சென்றது.இரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்த மாரிமுத்துவை மீட்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை அந்தாதி, கவிதாவின் செல்போன் அழைப்புகளை முதற்கட்டமாக சோதனை செய்தனர். அப்போது, கவிதாவிற்கும் - அங்குள்ள செட்டிதாங்கல் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது உறுதியானது. இதனால் சொத்துக்காக கூலிப்படை ஏவி மாரிமுத்துவை கொலை செய்ய வைத்துள்ளனர்.
இந்த தகவலை உறுதி செய்த காவல் துறையினர் கவிதா, அவரின் கள்ளக்காதலன் சங்கர், கூலிப்படையை சேர்ந்த பாபு (வயது 22), பிரகாஷ் ராஜ் (வயது 20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதற்கிடையில் விசாரணை நடைபெறும் போதே, 12 நாட்கள் அளித்த சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.