அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
தமிழகமே அதிர்ச்சி.. நண்பனின் மனைவியை கை-கால் கட்டிப்போட்டு கூட்டாக கற்பழிப்பு.. பரபரப்பு சம்பவம்.!
தமிழகமே அதிர்ச்சி.. நண்பனின் மனைவியை கை-கால் கட்டிப்போட்டு கூட்டாக கற்பழிப்பு.. பரபரப்பு சம்பவம்.!
தனது காதல் மனைவியை திட்டி வந்த பெண்ணை பழிவாங்க, மற்றொரு நண்பருடன் சேர்ந்து இரண்டு பேராக பெண்ணின் கை-கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் ஆரணி அருகே நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு, 26 வயதுள்ள மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பெண்மணி ஆரணியில் செயல்பட்டு வரும் தண்ணீர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், தினமும் வேலைக்கு சென்று வரும்போது, இலுப்பகுணம் கிராமத்தை சேர்ந்த ஓட்டுனருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பழகி வந்த நிலையில், அந்த ஓட்டுனருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், தனது குடும்பத்தை புரிந்துள்ளார். இதனையடுத்து, இளம்பெண் தனது குழந்தைகள் மற்றும் ஓட்டுனருடன் வசிக்க தொடங்கியுள்ளார்.
இந்த ஜோடி கடந்த 2 மாதமாக ஆரணியில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன் - மனைவியாக வசித்து வந்துள்ளனர். ஓட்டுனரின் நண்பரான மற்றொரு ஓட்டுநர் கோகுல்ராஜ் (வயது 22), பெங்களூரில் பணியாற்றுகையில் இளம்பெண்ணை காதலித்துள்ளார். கடந்த சில மாதத்திற்கு முன்னதாக, இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் பெண்ணை வீட்டில் இருந்து அழைத்து வந்து திருமணம் செய்த கோகுல்ராஜ், மேற்கூறிய ஓட்டுனரிடம் வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுள்ளார். இருவரும் நண்பர்கள் என்பதால் கோகுலராஜுக்கு தனது வீட்டருகே மற்றொரு வீட்டினை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, கோகுல்ராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து வசித்து வந்த நிலையில், நேற்று முந்தினம் ஓட்டுநர் இரவு வேலைக்காக செஞ்சி சென்றுள்ளார். ஓட்டுனரின் மனைவி மற்றும் மனைவியின் குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில், இந்த விஷயம் காதல் திருமணம் செய்த கோகுல்ராஜுக்கு தெரியவந்துள்ளது.
கோகுல்ராஜ் தனது மற்றொரு நண்பரான ஓட்டுநர் ஜெயசூர்யாவுக்கு (வயது 22) தொடர்பு கொண்டு ஆரணிக்கு வரவழைத்து, இருவரும் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். பின்னர், ஓட்டுனரின் வீட்டிற்கு சென்று, நண்பன் இல்லையா? என்று ஒன்றுமே தெரியாதது போல கேட்டுள்ளார்.
இளம்பெண்ணும் விபரீதம் புரியாமல் அவர் வெளியே சென்றுள்ளார் என்று கூற, தனது கணவரின் நண்பர்கள் என்பதால் பெண் இருவரையும் வீட்டிற்குள் அனுமதித்து பேசியுள்ளார். அப்போது, ஜெயசூர்யா மற்றும் கோகுலராஜ் வீட்டினை உட்புறமாக தாழிட்டு, குழந்தைகளை பக்கத்துக்கு அறையில் அடைத்து, இளம்பெண்ணை படுக்கை அறைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு நண்பனின் மனைவி என்றும் பாராது, பெண்ணை கை-கால்களை கட்டிப்போட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுமையை விடியோவாக எடுத்து, விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என்று மிரட்டி சென்றுள்ளனர்.
கயவர்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட, இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர்கள் ஆரணி மகளிர் நிலைய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணிடம் விசாரணை செய்து புகாரை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண் என் மனைவியை அடிக்கடி திட்டி வந்ததால், அவரை பழிவாங்க நண்பனின் மனைவியை என் நண்பனோடு சேர்ந்து பலாத்காரம் செய்தேன் என்று கோகுல்ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யாவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.