அந்த விசயத்திற்கு சம்மதிக்காத மனைவிக்கு சரமாரி அரிவாள்வெட்டு.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

அந்த விசயத்திற்கு சம்மதிக்காத மனைவிக்கு சரமாரி அரிவாள்வெட்டு.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்.!



Tirunelveli Palayamkottai Separated Wife Murder Attempt By Husband

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 30). இவரின் மனைவி செல்வி. தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். 

செல்வி கருங்குளத்தில் உள்ள சகோதரர் வீட்டில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வீர மணிகண்டன் மனைவியை குடும்பம் நடந்த பலமுறை அழைத்துள்ளார். ஆனால், செல்வி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். 

மேலும், கிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று மனைவியின் பணியிடத்திற்கு சென்ற வீரமணிகண்டன், செல்வியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். 

tirunelveli

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து எடுத்து சென்ற அரிவாளால் செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைக்கண்ட பங்க் ஊழியர்கள் செல்வியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

செல்விக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிவந்திபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.