ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த கம்பீரமான புலி! பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!

ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த கம்பீரமான புலி! பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!



tiger-died-in-forrest


நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியின் எல்லையில் புலி ஒன்று வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்தது. இதனிப்பார்த்த வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரிக்க தொடங்கினார்கள்.
 
இந்தநிலையில் அந்த புலி சாம்பார் சாதம் சாப்பிட்டதால் தான் இறந்ததாகவும், கிராமப்புறங்களுக்கு வருவதை தடுக்க யாராவது விஷம் வைத்திருப்பார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.

இதனையடுத்து புலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பசியில் இருந்த புலி, சாப்பிட எதுவும் கிடைக்காததால், குப்பைகளை சாப்பிட்டுள்ளதே இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளது.

tiger

புலி சாப்பிட்ட குப்பையில், துண்டு பிளேடு இருந்திருக்கிறது. அது புலி வயிற்றுக்குள் சென்ற நிலையில், அந்த பிளேடு புலியின் குடலை நாசப்படுத்தியுள்ளது. அதனப்பிறகுதான் புலி ரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
 
பிரேத பரிசோதனையில் ஒரு செண்டி மீட்டர் அளவுள்ள கூர்மையான பிளேடு புலியின் வயிற்றுக்குள் இருந்தது வெளியே எடுக்கப்பட்டது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு துண்டு பிளேடு புலியின் உயிரை பிரித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.