வீடு இடிந்து விழுந்து பெரும் சோகம்.. கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் துடிதுடிக்க மரணம்..!

வீடு இடிந்து விழுந்து பெரும் சோகம்.. கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் துடிதுடிக்க மரணம்..!



thoothukudi-pregnant-lady-dead-in-house

50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில், கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர்கள் முத்துராமன்-காளியம்மாள் தம்பதியினர். இவர்களின் மகள் கார்த்திகா. இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது கர்ப்பமாக உள்ளார். 

இதனால் வளைகாப்பு நடத்தி மீண்டும் தங்களின் வீட்டிற்கு பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அதிகாலையளவில் வீடு திடீரென இடிந்து விழுந்த நிலையில், கர்ப்பிணிபெண் மற்றும் அவரது தாயார் இருவரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். 

பின் இது குறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கார்த்திகா மற்றும் காளியம்மாளின் உடல்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Thoothukudi

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்திய நிலையில், முத்துராமன் மற்றும் காளியம்மாள் தம்பதி வசித்த வீடு 50 ஆண்டுகளுக்கு பழமையான வீடு என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கான்கிரீட் வீட்டின் கூரைப் பகுதியில் பழைய ஓடுகள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும்,ஈரத்துடன் இருந்ததால் சுவர் இடிந்து விழுந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.