கணித பாடம் சொல்லி கொடுப்பதாக மாணவிகளிடம் சில்மிஷம்.. கணித ஆசிரியர் அதிரடி கைது.!

கணித பாடம் சொல்லி கொடுப்பதாக மாணவிகளிடம் சில்மிஷம்.. கணித ஆசிரியர் அதிரடி கைது.!



Thiruvarur Anaikulam Govt School Maths Teacher Sexual Harassed Minor Girls

பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணித ஆசிரியர் கார்த்திக் சாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. 

இப்பள்ளியில் பயின்று வரும் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் எழுந்த நிலையில், இதுகுறித்த புகார் தலைமை ஆசிரியர் வரை சென்றுள்ளது. 

இதனையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் தலைமையிலான விசாரணை நடந்து வருகிறது. மேலும், விசாரணைக்கு பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கார்த்திக் சாமி கைது செய்யப்பட்டார்.