6 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

6 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!


thiruvannamalai-mother-murder-her-daughter

திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கத்தை சேர்ந்தவர் கலையரசன்-சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கலையரசன், சுகன்யாவிடம் கோழி குழம்பு வைக்க சொல்லி விட்டு வெளியே சென்றுள்ளார். 

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து கலையரசன் பார்த்த போது வீட்டிற்கு பின்புறம் மனைவியும், மகளும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். பக்கத்தில் சென்று பார்த்த போது குழந்தை நிவேதா இறந்துள்ளது. சுகன்யா மட்டும் உயிருக்கு போராடி கிடந்துள்ளார். 

அதனை அடுத்து சுகன்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்றுள்ளனர். அப்போது போலீசாரிடம் சுகன்யா வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

அதில் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த மாமனார்- மாமியார் கனவில் வந்து தங்களிடம் வந்துவிடுமாறு தொடர்ந்து கூறியதால் மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.