அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
வயலுக்கு சென்ற பெண்ணுக்கு வழியில் நடந்த பரிதாபம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
வயலுக்கு சென்ற பெண்ணுக்கு வழியில் நடந்த பரிதாபம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
வயலுக்கு நடந்து சென்ற பெண்ணின் மீது இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வருபவர்கள் மணி – லைலா தம்பதியினர். இவர்கள் கூலித் தொழிலாளர்களாக பணி புரிகின்றனர். தம்பதியினர் இருவரும் வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சத்யா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் லைலா மீது மோதி விபத்திற்குள்ளானது.
அத்துடன் லைலாவுக்கு இந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள். அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவருக்கு பலமான காயம் ஏற்பட்ட காரணத்தால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.