மகிழ்ச்சியான செய்தி..! தமிழகத்தில் மூன்றாவது நபர் கொரோனாவிடம் இருந்து விடுதலை!

மகிழ்ச்சியான செய்தி..! தமிழகத்தில் மூன்றாவது நபர் கொரோனாவிடம் இருந்து விடுதலை!


third-person-in-tamilnadu-cured-from-corono

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது நபர் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த முதல் நபர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்.

Tn coronoடெல்லியிலிருந்து ரயிலில் வந்த இரண்டாவது நபரும் ஏற்கனவே குணமாகிவிட்டார். தற்போது இவர்கள் இருவரை தொடர்ந்து மூன்றாவது நபரும் குணமாகிவிட்டார். 21 வயது நிரம்பிய அந்த நபர் அயர்லாந்திலிருந்து வந்தவர்.

இதுவரை தமிழகத்தில் குணமாகிய மூவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். மருத்துவர்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.