என்னோட ஹீரோ.. அந்த பிரபல நடிகருடன் காதலை உறுதி செய்தாரா பிக்பாஸ் அர்ச்சனா.!
சொந்த அண்ணனை ஓட ஓட கொடூரமாக கம்பியால் தாக்கி கொலை செய்த தம்பி..!!
சொந்த அண்ணனை ஓட ஓட கொடூரமாக கம்பியால் தாக்கி கொலை செய்த தம்பி..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை சரிசெய்ய சொந்த வீட்டை விற்க சொன்ன அண்ணனை தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியில் வசித்து வருபவர் நல்ல தம்பி. இவர் இரண்டு லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சுமார் 50 லட்ச ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே கடனை அடைக்க தனது பூர்வீக வீட்டை விற்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு அவரது தம்பி முத்துராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தம்பி முத்துராஜ் மற்றும் அவரது உறவினர்கள், அண்ணன் நல்ல தம்பியை கிராமத்திற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்த நல்லதம்பி பண்டாரம் பட்டி காட்டுப்பகுதியில் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அவரை விரட்டி சென்ற முத்துராஜ் மற்றும் உறவினர் இருவரும் சேர்ந்து தலையில் கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி சென்ற தம்பி முத்துராஜ் மற்றும் உறவினரான மற்றொரு முத்துராஜ் இருவரையும் புதிய முத்தூர் போலீசார் கைது செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நல்லதம்பி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.