சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞன்.! பதறிப்போன பெற்றோர்.!

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞன்.! பதறிப்போன பெற்றோர்.!


The young man who made the girl pregnant

நாள்தோரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றது. அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கினாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறைந்தபாடில்லை.

இந்தநிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 16 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த பகுதிக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டியான் என்ற 25 வயது இளைஞர் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது செபஸ்டியானுக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

young girl

இதனை பயன்படுத்திக்கொண்ட செபஸ்டியான் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் செபஸ்டியானை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.