உல்லாசத்துக்கு வர மறுத்த மைத்துனி... ஆத்திரத்தில் தங்கையின் கணவர் செய்த கொடூர செயல்..!

உல்லாசத்துக்கு வர மறுத்த மைத்துனி... ஆத்திரத்தில் தங்கையின் கணவர் செய்த கொடூர செயல்..!


The sister-in-law who refused to come to the party... the sister-in-law's husband committed a cruel act in anger..!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனுசாமி - கௌதமி தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கௌதமியின் கணவர் முனுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்றுள்ளார் கௌதமி.

கௌதமியின் தங்கை பிரியாவின் கணவரான சஞ்சீவிராமன் தனிமையில் இருக்கும் கௌதமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் பொறுமை இழந்த கௌதமி காவல் நிலையம் சென்று தங்கையின் கணவரான சஞ்சீவிராமன் மீது புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் சஞ்சீவி ராமனை அழைத்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.

Sister- in - law

இந்த சம்பவத்தால் ஆத்திரத்தில் இருந்த சஞ்சீவிராமன் கௌதமியை பழிவாங்க எண்ணி அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் கௌதமியை சஞ்சீவிராமன் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் கௌதமி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான சஞ்சீவிராமனை தேடி வருகின்றனர்.