280 பவுன் தங்கம், 25 லட்சம் பணம், இன்னோவா கார்... டாக்டர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்.. ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு.!
280 பவுன் தங்கம், 25 லட்சம் பணம், இன்னோவா கார்... டாக்டர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்.. ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு.!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள சக்திவேல் என்ற டாக்டர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் தனது மனைவி உட்பட நான்கு பேருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார்
அப்போது வீட்டிற்குள் நுழைந்த முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த நபர்களை கட்டி போட்டு விட்டு பீரோவில் இ ரசிகர்கள் யுத்த 280 பவுன் தங்க நகை,25 லட்சம் பணம் மற்றும் வீட்டிருந்த இன்னோவா கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோர் கொள்ளையடித்து சென்றது வடமாநிலத்தவர்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.