தலைமுடி அறுக்கப்பட்டு, பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்த ஆசிரியர்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

தலைமுடி அறுக்கப்பட்டு, பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்த ஆசிரியர்! வெளியான அதிர்ச்சி பின்னணி!


Teacher murdered by co-teacher for money issue

கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மஞ்சேஸ்வரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவரது மனைவி ரூபஸ்ரீ. இவர் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற ரூபஸ்ரீ வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சுபஸ்ரீ கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் ரூபஸ்ரீயை கடற்கரையில் சடலமாக கண்டுபிடித்தனர். மேலும் அவரது தலைமுடி அறுக்கப்பட்ட உடலில் பல இடங்களில் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder

மேலும் போலீசார் ரூபஸ்ரீயின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு மேற்கொண்டபொழுது ரூபஸ்ரீ கடைசியாக வெங்கட்ரமணா என்பவரிடம் பேசியது தெரியவந்தது.இ தனை தொடர்ந்து வெங்கட்ராமனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் கூறியதாவது, நான் வேலைக்கு சேர்ந்த அதே வருடம்தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்தார்.இருவரும் நட்பாக பழகி வந்தோம்.

மேலும் எங்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்தது. நாளடைவில் இதனால் எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. நானும் ரூபஸ்ரீ அடிக்கடி சந்தித்து தொந்தரவு செய்து வந்தேன். இந்நிலையில் சமீபத்தில் ரூபஸ்ரீ வீட்டிற்கு சென்ற நான் அவரை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு,  அவரது சடலத்தை காரில் கொண்டு சென்று கடலில் வீசினேன் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.