அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
பா.ஜனதா துணை தலைவர் தி.மு.க.வில் சேர்ந்தார்!
பா.ஜனதா துணை தலைவர் தி.மு.க.வில் சேர்ந்தார்!
தமிழக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து தி.மு.க.வில் இணைந்தார்.
சமீபத்தில், புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு அவர்களின் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்ட ரதிய ஜனதா மாநில துணை தலைவர் அரசகுமார், விழாவுக்கு தலைமை தாங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான். நான், இந்த இயக்கத்துக்கு நன்றிக் கடன் பட்டவன். காலம் கனியும். காரியங்கள் தானாக நடக்கும். தளபதி மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார். நான் ஏற்கனவே தி.மு.க. கரை வேட்டி கட்டியவன். எப்போது வேண்டுமானாலும் அதனை கட்டிக் கொள்வேன்” என பேசினார்.
இதனையடுத்து அவரது பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் அரசகுமார் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து தி.மு.க.வில் இணைந்தார்.