ஊரடங்கு நீடிப்பில் இந்தமுறை பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு!! எதெற்க்கெல்லாம் அனுமதி தெரியுமா?? முழு விவரம் இதோ..
ஊரடங்கு நீடிப்பில் இந்தமுறை பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு!! எதெற்க்கெல்லாம் அனுமதி தெரியுமா?? முழு விவரம் இதோ..
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 14 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் வரும் ஜூன் 7 ஆம் தேதிவரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் காலையுடன் முடிவுக்குவரும் நிலையில், தற்போது மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீடித்துள்ளது தமிழக அரசு.
வரும் திங்கள் முதல் ஜூன் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் இந்தமுறை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் இதோ.
1. மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள், ஹர்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
3. வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டுபயணிகள் என இபதிவுடன் அனுமதிக்கப்படும்.
4. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.
5. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளஅனுமதிக்கப்பட்டுள்ளது.
6. எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்
7. நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியன விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்