பள்ளியில் இறந்த நிலையில் அசைவின்றி அமர்ந்திருந்த மாணவி- இறந்தது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!
பள்ளியில் இறந்த நிலையில் அசைவின்றி அமர்ந்திருந்த மாணவி- இறந்தது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!
கன்னியாகுமரி மாவட்டம் சூரிய கோடு பகுதியை சேர்ந்த மாணவி ரெமி பிராங்க்ளின் இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அந்த பள்ளியில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் ஆக இருந்துள்ளனர். சம்பவத்தன்று கணக்கு ஆசிரியரால் மாணவிக்கு இச் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணக்கு ஆசிரியை கணக்கு நடத்திக்கொண்டிருக்கும் போது மாணவி பாங்கினை அழைத்து கரும்பலகையில் ஒரு கணக்கிற்கு தீர்வு காணுமாறு கூறியுள்ளார். ஆனால் அம் மாணவியால் அதனை தீர்க்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவியை கோபமாக திட்டியுள்ளார்.
அதன் பிறகு மாணவியை அவளது இடத்தில் அமருமாறு கூறியுள்ளார். அம்மாணவியும் சென்று அமர்ந்துள்ளார். தொடர்ந்து தனது பாடத்தை நடத்த தொடங்கிவிட்டார் ஆசிரியை. பின் அவ்வகுப்பு முடிந்து வெளியேறும் சமயத்தில் கூட மாணவி அப்படியே அமர்ந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த ஆசிரியை அவளது பக்கத்தில் சென்று அழைத்துள்ளார். ஆனால் மாணவி எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். பதறிபோன ஆசிரியை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அவர்கள் உடனே ரெமியின் பொற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்பு அம்மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அம்மாணவியை சோதனை செய்த டாக்டர்கள் ரெமி இறந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது என்று கூறியுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.