பெற்றோருக்காக 10 நிமிடம் ஒதுக்குங்கள்... அது உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும்... மாணவர்களிடம் கூறிய நயன்தாரா...!

பெற்றோருக்காக 10 நிமிடம் ஒதுக்குங்கள்... அது உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும்... மாணவர்களிடம் கூறிய நயன்தாரா...!


Spare 10 minutes for parents...it will become your blessing... Nayanthara told students...

சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். 

"இறைவன்" படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துவரும் நயன்தாரா "ஜவான்" என்ற இந்தி படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

அவர் பேசும்போது, கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானது, மகிழ்ச்சி நிறைந்தது. இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்கு முக்கியமானதாகும். 

இந்த காலகட்டத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. இந்த சமயத்தில் நீங்கள் நல்ல நண்பர்களோடு பழக வேண்டும். நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும். கெட்டவர்களோடு நீங்கள் சேர்ந்தால், வாழ்க்கை வேறு மாதிரி சென்று விடும். 

கல்லூரி நாட்களில் எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் போது, சிறந்தவராக திறமையானவராக இருக்க வேண்டும். எவ்வளவு உயரத்திற்கு போனாலும், பணிவாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக இருக்கும் போது, உங்கள் வாழ்க்கை இன்னும் அழகானதாக இருக்கும். 

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களுக்காக தினமும் பத்து நிமிடம் செல்வழித்தால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும் என்று பேசினார்.