குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த மகன்... கண்டித்த தந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...

குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த மகன்... கண்டித்த தந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...


Son murder his father in Kovil Patti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா(73). இவரது மகன் ஜெயக்குமார். முன்னாள் இராணுவ வீரான ஜெயக்குமார் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று வழக்கம் போல் ஜெயக்குமார் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தந்தை சுப்பையா அவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை சுப்பையாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.

Kovil Patti

அதில் படுகாயமடைந்த சுப்பையாவை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.