நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் புகுந்த பாம்பு.! அய்யய்யோ பாம்பு என அலறிய பயணிகள்.!
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் புகுந்த பாம்பு.! அய்யய்யோ பாம்பு என அலறிய பயணிகள்.!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தினந்தோறும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சென்னை எழும்பூரில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் ஏறத் தொடங்கினர்.
அப்போது எஸ்-1 கோச்சில் ஒரு இருக்கையில் பாம்பு ஒன்று இருப்பதை பயணிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது திடீரென அந்த பெட்டியில் எரிய பயணிகள் பாம்பு... பாம்பு... என அலறியபடி ரயில் பெட்டியை விட்டு வெளியே வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த எழும்பூர் தீயணைப்பு படையினர் பாம்பை பத்திரமாக பிடித்தனர். அந்த ரயில் பெட்டியில் மீட்கப்பட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்தது என்றும், வனத்துறையிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.