கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னையில் கொண்டித்தோப்பு சுந்தரமுதலி பகுதியை சேர்ந்த முதியவர் வாலாராம். இவரது வீடு அமைந்துள்ள தெருவில், பள்ளியில் பயின்று வரும் மாணவி வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த சிறுமி நேற்று முன்தினம் கொண்டித்தோப்பு சுந்தரமுதலி தெருவில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு செய்து கொண்டிருந்தபோது, வாலாராம் வீட்டிற்கு சென்று விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, வாலாராம் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து மாணவி அதிகாரிகள் உதவியுடன் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வாலாராம், மாணவியிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாலாராமை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.