சிறப்பு வகுப்புக்கு சென்ற 8 ஆம் வகுப்பு மாணவியை, அறைக்குக் கூட்டிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்!

சிறப்பு வகுப்புக்கு சென்ற 8 ஆம் வகுப்பு மாணவியை, அறைக்குக் கூட்டிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்!



sexual abused to school girl

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தனியார் பள்ளி ஒன்றில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று  சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. அந்த பள்ளியில் நடத்தப்படும் சிறப்பு வகுப்பிற்கு மற்ற தனியார் பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பள்ளியில் நடந்த கையெழுத்து பயிற்சி தொடர்பான சிறப்பு வகுப்பிற்கு, மற்றொரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி வந்தார். அவர் பள்ளி தாளாளரிடம் சென்று கையெழுத்து பெற சென்றார். அப்போது அந்த மாணவிக்கு, அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

school girl

அங்கு மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, சக மாணவ, மாணவிகள் மற்றும் அதே பள்ளியில் ஜோதிடம் தொடர்பாக நடந்த சிறப்பு வகுப்பில் பங்கேற்றிருந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அங்கு ஓடி வந்தனர். இதனால் அவர்களை பார்த்து பயந்த தாளாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக மாணவியிடம் பள்ளியில் இருந்தவர்கள் கேட்டபோது, தாளாளர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், தலைமறைவான தனியார் பள்ளி தாளாளரை போலீசார் தேடி வருகின்றனர்.