#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
ஓனரம்மா கை கால்களை கட்டிப்போட்டு காவலாளி செய்த கொடூரம்.! மனைவியும் உடந்தை.! வெளியான பகீர் தகவல்.!
ஓனரம்மா கை கால்களை கட்டிப்போட்டு காவலாளி செய்த கொடூரம்.! மனைவியும் உடந்தை.! வெளியான பகீர் தகவல்.!
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ரவி என்பவரது வீட்டில் பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். ராகேஷ் அவரது மனைவி ரேவதியை அங்கேயே வீட்டு வேலைக்கு சேர்த்துவிட்டு இருவரும் அங்கேயே பணி செய்து வந்துள்ளார். இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ரவி, அவரது மனைவி கலாவுக்கு போன் செய்துள்ளார்.
ஆனால் நீண்டநேரம் ஆகியும் ரவியின் மனைவி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரவி, வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தனது மனைவி கலா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரவி வீட்டில் வேலை செய்துவந்த ராகேஷ் மற்றும் அவரது மனைவி ரேவதியை காணவில்லை. கலாவின் கழுத்தில் கிடந்த நகையும் மாயமாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ராகேஷ், வீட்டில் தனியாக இருந்த கலாவின் கை, கால்களை கட்டிப்போட்டு, அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, கலா கழுத்திலும், வீட்டின் பீரோவிலும் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்தநிலையில், தப்பி ஓடிய காவலாளி ராகேஷ் மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில், பெங்களூரில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ரவியின் மனைவி கலாவை அவர்கள் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். கலாவும் அவர்களுடன் போராடியுள்ளார். இதையடுத்து தலையில் அவரை பலமாக தாக்கியுள்ளனர். பின்னர் கை, கால்களை கட்டி கலாவை கொலை செய்த பிறகு அவர் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர்.