பயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி.! கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

பயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி.! கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!



school teacher misbehave to student

தர்மபுரி மாவட்டம் கூலிக்கொட்டாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரானா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயிற்சி புத்தகம் வாங்குவதற்கு நேற்றுமுன்தினம் அந்த மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். 

அப்போது அந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் கோவிந்தன் என்பவர் பயிற்சி புத்தகத்தை மனைவியிடம் கொடுத்த போது, கதவை சாத்திக்கொண்டு அந்த மாணவியை துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற மாணவி பெற்றோரிடம் ஆசிரியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறி அழுதுள்ளார். 

school girl

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கோவிந்தனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசிரியரே மனைவியை வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.