நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் பழகிக்கொண்டிருந்த சிறுவன்.! திடீரென அறுந்த கயிறு.! சோக சம்பவம்.!

நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் பழகிக்கொண்டிருந்த சிறுவன்.! திடீரென அறுந்த கயிறு.! சோக சம்பவம்.!



school-student-drown-in-well

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிவா என்ற இளைஞன் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில், சிவா நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அந்த கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் பழகிக்கொண்டிருந்தார். 

அப்போது திடீரென சிவாவின் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கி மாயமாகினார். இது குறித்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

young boyஇதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கிணற்றில் குளித்தபோது இளைஞன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.