முன்கூட்டியே வெளியாகிறார் சின்னம்மா சசிகலா.! உச்சகட்ட குஷியில் அமமுகவினர்.!

முன்கூட்டியே வெளியாகிறார் சின்னம்மா சசிகலா.! உச்சகட்ட குஷியில் அமமுகவினர்.!



sasikala-release-soon-YUSDX9

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 18-ஆம் தேதி சசிகலாவின் அபராதமான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா சசிகலாவை விடுதலை செய்வதற்கு தடையில்லை என்பதற்கான ஆணையை சிறைத்துறைக்கு வழங்கினார். இதனையடுத்து சசிகலாவின் தரப்பில் தனக்கு சிறைத்துறை விதிமுறைகளின்படி 126 நாட்கள் சலுகை வழங்க முடியும். எனவே முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இதனால், கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் சசிகலாவை எப்போது விடுதலை செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கெடுத்தால் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைகிறது.

sasikala
தண்டனை காலங்களில் இரண்டு கட்டங்களாக 17 நாட்கள் மட்டுமே சசிகலா பரோலில் வெளியே வந்துள்ளார். அதே போல இறுதி தீர்ப்புக்கு முன் சசிகலா சென்னை மற்றும் பெங்களூரு சிறையில் 35 நாட்கள் இரு கட்டங்களாக சிறை தண்டனை அனுபவித்துள்ளார். கர்நாடக சிறைத்துறை விதிமுறையின்படி கைதி சிறையில் இருந்த விடுமுறை தினங்கள் கணக்கிடப்பட்டு, அதில் இருந்தே பரோலில் சென்ற நாட்களை கழிக்க வேண்டும்.

அதன்படி பார்த்தால் கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா 100க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களில் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்களில் இருந்து பரோலில் சென்ற 17 நாட்களை கழித்தால் ஜனவரி 27-ஆம் தேதிக்கு முன்பே அவரை விடுதலை செய்ய வேண்டும். மேலும், சிறை நன்னடத்தை விதிகளின்படி அதனை கணக்கிட்டால் ஒரு மாதம் வரை சலுகை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இருக்கிறது.

இந்தநிலையில் டிசம்பரில் சசிகலாவை விடுதலை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் நாளை சென்னை சிறையில் இருந்ததற்கான ஆதாரங்களை பெங்களூரு சிறையில் தாக்கல் செய்ய உள்ளார். இதன் பின்னர் கர்நாடக சிறைத்துறை சசிகலாவின் விடுதலை தேதியை உறுதி செய்யும் என கூறப்படுகிறது.